பாறை உருண்டு விழுந்து 2 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
சேலம்:
பாறை உருண்டு விழுந்ததில் மண் எடுக்கும் பணியில் இருந்த இரண்டு கூலித் தொழிலாளிகள் நசுங்கி அதேஇடத்தில் இறந்தனர்.
சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் சவுண்டம்மன் கோவிலில் கட்டுமாணப் பணிகள் நடந்து வருகின்றன.இந்தக் கோயிலுக்குத் தேவையான மணல், மற்றும் மண், கற்கள் டிப்பர் லாரி மூலம் ஊத்துமலை என்றஇடத்திலிருந்து எடுத்து வரப்பட்டது.
ஊத்துமலையில் இந்த லாரிக்கு மண் ஏற்றும் பணியில் 10 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். மலைப்பகுதியில்இவர்கள் மண் எடுத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது மண்ணை அவர்கள் தோண்டி எடுத்துக் கொண்டிருந்தபோது, மேலிருந்த பாறை ஒன்று உருண்டு வந்துஇவர்கள் மீது விழுந்தது. இதில் இருவர் அதே இடத்தில் இறந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்துவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications