For Daily Alerts
Just In
காஞ்சிபுரம் அருகே கார்-லாரி மோதல்: 4 பேர் பலி
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே காருடன் லாரி மோதியதில் ஒரு குழந்தை, ஒரு பெண் உள்பட 4 பேர் பலியாயினர்.
திருமணக் கோஷ்டி ஒன்று டாடா சுமோ காரில் சென்று கொண்டிருந்தது. காஞ்சிபுரம் அருகே இந்தக் கார் எதிரேவந்து கொண்டிருந்த லாரியுடன் நேருக்க நேராக மோதியது.
இவ்விபத்தில், காரில் பயணம் செய்த ஒரு குழந்தை, ஒரு பெண் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கிபரிதாபமாக இறந்தனர். 3 பேர் காயமடைந்தனர்.
விபத்து குறித்து, காஞ்சிபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments
Story first published: Monday, June 11, 2001, 5:30 [IST]