கச்சத்தீவை மீட்க வேண்டும்: தி.க. கோரிக்கை
மதுரை:
கச்சத்தீவை இலங்கையிடமிருந்து மீட்க வேண்டும் என்றும், மீனவர் பிரச்சனைக்கு நிரந்தரமான முடிவு காணவேண்டும் என்றும் திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீரமணி கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தபோது:
தமிழகத்தின் கிழக்குப் பகுதியில் வாழும் மீனவர்கள் கச்சத்தீவு பகுதிக்குள் மீன் பிடிக்கச் செல்வதால் அவர்கள்தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு வருகின்றனர்.
இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது இலங்கையிடம் கச்சத்தீவை ஒப்படைக்கப்பட்டது. அது மிகப் பெரியதவறு. தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லும் போது தவறுதலாக சர்வதேச நீர் எல்லையைக் கடந்துவிடுகின்றனர். அதனால் அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து விடுகின்றனர்.
கைது செய்யப்படும் மீனவர்கள் பற்றி இந்திய அரசு கவலைப்படுவதில்லை என்பது வருந்தத்தக்கது. கச்சத்தீவைஇலங்கையிடமிருந்து மீட்டு மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
இலங்கை அரசுக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைக்கான சூழ்நிலையைஏற்படுத்தும் முயற்சியில் நார்வே அரசு ஈடுபட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் இதுவரை இந்த முயற்சியில்ஈடுபட்டு வந்த எரிக் சோல்ஹேமை நீக்கியது வருந்ததக்கது.
காஷ்மீர் பிரச்சனை குறித்து பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதைப் போல், இலங்கை தமிழர்பிரச்சனையைத் தீர்க்க இலங்கை அரசுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்த முயல வேண்டும் என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications