இங்கிலாந்திலும் "கிரீன் கார்டு"
லண்டன்:
அமெரிக்கன் ஸ்டைலில் இங்கிலாந்தும் "கிரீன் கார்டு" திட்டத்தைக் கொண்டுவரவுள்ளது.
இதன்மூலம் வெளிநாட்டினர் சட்ட விரோதமாக இங்கிலாந்துக்குள் நுழைவதைப் பெருமளவில் தடுக்க முடியும்என்று இங்கிலாந்தின் புதிய உள்துறை அமைச்சர் டேவிட் ப்ளங்கட் கூறினார். தான் பதவியேற்ற உடனேயே அவர்தடாலடியாக இந்த அதிரடித் திட்டத்தை அறிவித்துள்ளார்.
தேர்தலுக்கு முன்பாகவே, தன்னுடைய கட்சித் தேர்தல் அறிக்கையில் இந்த "கிரீன் கார்டு" திட்டத்தைஅறிவித்திருந்தார் பிளங்கட். தற்போது அதை நிறைவேற்றும் வகையில் இந்த "கிரீன் கார்டு" அறிவிப்பைவெளியிட்டுள்ளார்.
"கிரீன் கார்டு" வைத்திருப்பதால், இங்கிலாந்தில் வேலை செய்வதற்காக வரும் வெளிநாட்டினர் குறிப்பிட்டகாலத்திற்கு மட்டும்தான் இங்கேயே இருக்கமுடியும். அது முடிந்தவுடன் அவர்கள் பெட்டி, படுக்கையைக்கட்டிக்கொண்டு கிளம்ப வேண்டியதுதான்.
ஆனால், கடந்த ஆண்டு இங்கிலாந்திற்கு வந்துள்ள 10,000க்கும் மேற்பட்ட இந்திய சாப்ட்வேர் நிபுணர்களுக்குஇந்தத் திட்டத்தில் சலுகை அளிக்கப்படும். சாப்ட்வேர் மூலமாக அவர்கள் உலக அளவில் இங்கிலாந்துபொருளாதாரத்தை உயர்த்தவிருப்பதால் அவர்களுக்கு இந்தச் சலுகை அளிக்கப்படுகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications