ஜெயாவுக்கு எதிரான சுவாமி வழக்கு: இன்று விசாரணை
சென்னை:
ஜெயலலிதாவை முதல்வராக நியமித்த ஆளுநர் பாத்திமா பீவியின் உத்தரவை எதிர்த்து சுப்பிரமணியம் சுவாமிதாக்கல் செய்துள்ள வழக்கு மீதான விசாரணை இன்று (திங்கள்கிழமை) சென்னை உயர் நீதிமன்றத்தில்விசாரிக்கப்படும் எனத் தெரிகிறது.
கடந்த புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜரான சுவாமி இந்த மனு மீதான விசாரணையை துரிதப்படுத்த வேண்டும்எனக் கேட்டுக் கொண்டார்.
தலைமை நீதிபதி என்.கே. ஜெயின், நீதிபதி தங்கவேல் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இந்த வழக்கைவிசாரிக்கும்.
ஜெயலலிதா முதல்வரானதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்கள் மீதானவிசாரணையும் முடிவடையும் வரை ஜெயலலிதாவின் மேல் முறையீட்டு மனுக்கள் எதையும் விசாரிக்க வேண்டாம்எனவும் நீதிமன்றத்தை சுவாமி கோரியுள்ளார்.
தனக்கு தண்டனை விதிக்கப்பட்ட டான்சி வழக்கு மற்றும் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்குகளை எதிர்த்துஜெயலலிதா மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் தனது இந்த மனு மீதான விசாரணை முடியும் வரை முதல்வராக செயல்பட ஜெயலலிதாவுக்கு தடை விதிக்கவேண்டும் எனவும் சுவாமி கோரியுள்ளார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications