ஜெயா டிவிக்கு சிறப்பு சலுகையா?
சென்னை:
தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், தமிழக ஆளுநர் பாத்திமா பீவியும் ராஜ்பவனில் சந்தித்து பேசியதைப் படம்பிடிக்க ஜெயா டிவிக்கு மட்டும் எந்தவிதமான சலுகையும் அளிக்கப்படவில்லை என அந்த டிவி நிறுவனம்கூறியுள்ளது.
கடந்த சனிக்கிழமை ஜெயலலிதா தமிழக ஆளுநரை சந்தித்து பேசினார். அப்போது தமிழக அமைச்சர்களாக இருந்தஅய்யாறு வாண்டையார், நத்தம் விஸ்வநாதன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரை பதவி நீக்கம்செய்துவிட்டு வேறு 3 புதிய அமைச்சர்களை நியமிப்பது குறித்து ஆளுநரிடம் தெரிவித்தார்.
இச்சந்திப்பைப் படம் பிடிக்க ஜெயா டிவியைத் தவிர வேறு எந்தப் பத்திரிக்கையாளர்களோ தனியார்டிவிக்காரர்களோ அனுமதிக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. இதனால் பத்திரிகையாளர்களும் மற்றடிவி நிருபர்களும் ராஜ்பவன் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், பிரஸ் கிளப்பில் ஜெயா டிவிக்கு சலுகை அளிக்கப்பட்டதை எதிர்த்து கண்டனத் தீர்மானமும்நிறைவேற்றப்பட்டது.
இது குறித்து ஜெயா டிவி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சனிக்கிழமை ராஜ்பவனில்முதல்வர்-ஆளுநருக்கிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையை படம் பிடிக்க ஜெயா டிவி அனுமதிக்கப்படவில்லை.இதற்காக ஜெயா டிவிக்கு எந்த சலுகையும் அளிக்கப்படவில்லை.
முதல்வர்-ஆளுநர் சந்திப்பு பற்றிய காட்சிகள் எதுவும் ஜெயா டிவியில் காட்டப்படவில்லை. சிறப்பு செய்தியும்வெளியிடப்படவில்லை. இது போன்ற செய்திகள் விஷமத்தனமானவை. தவறான எண்ணத்துடன் பரப்பப்பட்டவைஎன கூறியுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications