யாழ்பாணத்தில் 3 ராணுவத்தினர், 2 புலிகள் பலி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கையில் தொடர்ந்து நடந்துவரும் சண்டையில் 3 ராணுவத்தினரும் 2 விடுதலைப்புலிகளும் கொல்லப்பட்டனர்.
யாழ்ப்பாணத்தின் கொடிக்காமம் பகுதியில் விடுதலை புலிகள் வைத்திருந்த சக்தி வாய்ந்த கண்ணி வெடிவெடித்ததில் ஒரு ராணுவவீரர் கொல்லப்ட்டார்.
கிழக்கு அம்பாராவில், வெஹர்காமாவில் இருக்கும் போலீஸ் முகாம் மீது விடுதலை புலிகள் தாக்குதல் நடத்தினர்.இத்தாக்குதலில், 2 ஊர்க்காவல் படையினர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை, யாழ்ப்பாணத்தின் நாகர்கோவில மற்றும் முகமலை பகுதிகளில் 2 விடுதலைபுலிகள் இலங்கை ராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட விடுதலை புலிகளிடமிருந்து ஏராளமானஆயுதங்களையும், வெடிபொருட்களையும் ராணுவம் கைப்பற்றியது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications