ஆளுனரைக் குறை சொல்லக்கூடாது: லத்தீப்
கரூர்:
ஆளுநர் தீர்ப்பு குறித்து குறை சொல்ல அரசியல் கட்சிகளுக்கு அதிகாரம் இல்லை என தேசிய முஸ்லீம் கட்சியின்பொதுச் செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான அப்துல் லத்தீப் கூறியுள்ளார்.
அவர் கரூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது:
அமைச்சரை நீக்குவது, அமைச்சரை மாற்றுவது என்பதெல்லாம் முதல்வரின் அதிகாரத்திற்குட்பட்டது. அவரதுவிருப்பத்தின் பேரில் ஏற்படக்கூடியதும் கூட.
கூட்டணியின் நோக்கமே தகாதவர்களை நீக்கி விட்டு, தகுந்தவர்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதுதான்.அது நிறைவேறியுள்ளது. காலச் சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணியை, நடைமுறையை மாற்றிக் கொள்வதுஇயல்பாகிவிட்டது.
தேர்தல் முடிந்தவுடன் இப்போது காங்கிரசுடன் கூட்டணி இல்லை என ஜெயலலிதா கூறியுள்ளார். எனவேகாங்கிரஸ் தலைவர் இளங்கோவன் ஒருங்கிணைந்த எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என தெரிவித்துள்ளார்.இவ்வாறு அவர் கூறுவதால், எதிரியாக மாறி விட்டதாக அர்த்தம் கொள்ள முடியாது.
தமிழக ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் என திமுகவும், பாஜகவும் கூறியுள்ளன. ஆளுநரைக் கண்காணிக்கும்உரிமை அரசியல் கட்சிகளுக்கு கிடையாது. சில சிக்கலான சூழ்நிலைகளில் குடியரசுத்தலைவர் எவ்வாறுமுடிவெடுக்க முடியுமோ, அப்படியே ஆளுநரும் முடிவெடுக்கலாம். எனவே, இவர்களது தன்னிச்சையானஅதிகாரத்தை யாரும் மறுக்க முடியாது.
ஆளுநரை விமர்சிப்பதும், அவரை திரும்ப அழைக்க வேண்டும் எனக் கூறுவதும், அவரது அதிகாரத்தில்தலையிடுவதும் ஜனநாயக மரபுகளைக் கடைபிடித்து வரும் அரசியல் கட்சிகளுக்கு ஏற்புடையதல்ல.
நேபாளத்தில் மன்னர் குடும்பம் படுகொலை செய்யப்பட்டதில் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவுப் பிரிவிற்குத்தொடர்புள்ளது என பால் தாக்கரே கூறியுள்ளார். அவ்வாறு தொடர்புடையது என்பது இவருக்கு எப்படி தெரியும்?அப்படி தொடர்பு இருப்பது இவருக்குத் தெரியுமானால், இது குறித்து பால் தாக்கரேயிடம் விசாரணைமேற்கொள்ள வேண்டும்.
இந்தியா முழுவதிலும் ஐ.எஸ்.ஐ., ஊடுறுவல் உள்ளது எனத் தெரிவித்துள்ளார். அப்படியானால், அவர்கள் என்னசெய்து கொண்டு இருக்கின்றனர்? ஆயிரம் வழிகளில் நடவடிக்கை எடுத்து தடுத்து நிறுத்தலாமே. ஆயிரத்து ஒருமுறையில் அவர்கள் உள்ளே நுழைந்தால், அவர்களைப் பிடிக்க முடியவில்லை என்றால், உங்களுக்குத் திறமைஇல்லை என்று தானே அர்த்தம் என்றார் லத்தீப்.












Click it and Unblock the Notifications