புதுவையின் புதிய சபாநாயகரானார் ராமச்சந்திரன்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி மாநிலப் புதிய சபாநாயகராக ஆளும் காங்கிரஸ் கூட்டணியின் டி. ராமச்சந்திரன்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
திங்கள்கிழமை நடைபெற்ற சபாநாயகர் தேர்தலில் 15 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் டி. ராமச்சந்திரன்.
குரல் ஓட்டு மூலமே சபாநாயகர் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதால், எதிர்க்கட்சியான திமுக இதைஆட்சேபித்து சட்டசபையில் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, அவர்களை சபையிலிருந்துவெளியேற்றுமாறு சபைக் காவலர்களுக்கு தற்காலிக சபாநாயகர் ஸ்ரீதரன் உத்தரவிட்டார்.
திமுகவினர் வெளியேறிய பின்னர், குரல் ஓட்டு மூலம் வாக்கெடுப்பு நடந்தது. 15 வாக்குகள் பெற்று டி.ராமச்சந்திரன் வெற்றி பெற்றதாக ஸ்ரீதரன் அறிவித்தார். இதில் ஒரு வாக்கு குறைந்தாலும், சண்முகம்தலைமையிலான பாண்டிச்சேரி அமைச்சரவை கடும் நெருக்கடியைச் சந்தித்திருக்கும்.
சபையிலிருந்து வெளியேற்றப்பட்ட திமுகவினர், இதைக் கடுமையாகக் கண்டித்து, மாநில ஆளுநர் ரஜினிராயிடம்புகார் கொடுத்தனர்.












Click it and Unblock the Notifications