தேக்குமரக்கடத்தல்.... வாண்டையார் நண்பர் கைது
திருநெல்வேலி:
சமீபத்தில் பதவிநீக்கம் செய்யப்பட்ட தமிழக அமைச்சர் அய்யாறு வாண்டையரின் நண்பர் முருகையன்,தேக்குமரங்கள் கடத்தப்பட்டது தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.ஆனால் இந்த விவகாரத்தில்வாண்டையாருக்கு எந்த விதமான தொடர்பும் இல்லை என முருகையன் கூறியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு - முண்டந்துறை புலிகள் காப்பம் உள்ளது. இது வனத்துறையின்கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தேக்குமரம் பயிரிடப்பட்டுள்ளது.
ஒரு கும்பல் நீண்டகாலமாக இங்கிருந்து தேக்குமரங்களைக் கடத்திச் சென்றது. இந்த கடத்தல் விஷயத்தில் சமீபத்தில்பதவி நீக்கம் செய்யப்பட்ட தமிழக அமைச்சர் அய்யாறு வாண்டையாரின் நண்பர் முருகையன் ஈடுபட்டதாககூறப்பட்டு வந்தது.
இந்த விஷயம் தொடர்பாக, செய்தியாளர்களைச் சந்தித்த ராதாபுரம் சுயேச்சை எம்.எல்.ஏ. அப்பாவு, இந்த கடத்தல்விஷயத்தில் தனுஷ்கோடி ஆதித்தனுக்கும், தற்போதைய அமைச்சர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டினார். ஆனாலும் அவர் அமைச்சரின் பெயரை வெளியிடவில்லை.
இந்நிலையில் அய்யாறு வாண்டையாரை தமிழக முதல்வர் ஜெயலலிதா சனிக்கிழமை பதவி நீக்கம் செய்தார்.அய்யாறு வாண்டையாரின் நண்பரான முருகையன் கைது செய்யப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காவல் நிலையத்திற்குகொண்டுவரப்பட்டார். அதன்பின் அவர் மேல் விசாரணைக்காக வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டார்.
முருகையன் கூறுகையில், இந்த விஷயத்தில் அய்யாறு வாண்டையாருக்கு எந்த விதமான தொடர்பும் இல்லை.முன்னாள் அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தனுக்கும், ராதாபுரம் எம்.எல்.ஏ. அப்பாவுக்கும் இடையே மரம்வெட்டியதில் பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக திட்டமிட்டு இந்த விஷயத்தைப்பெரிதுபடுத்தியுள்ளனர்.
மரம் வெட்டுவது ஒரு வருட காலமாக நடந்துவருகிறது. இதில் சட்டப்படி எந்தவிதமான குற்றமும் கிடையாதுஎன்றார் முருகையன்.
போலீசார் மேலும் 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.