சேலத்தில் நர்ஸ் தீக்குளித்து தற்கொலை
Subscribe to Oneindia Tamil
சேலம்:
சேலத்தில் வீட்டிற்குள் தாழிட்டு தனியாக இருந்த நர்ஸ் திடீரென தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் மாவட்டம், பெரியபுதூரைச் சேர்ந்தவர் சாந்தி. இவரது மகள் ஜெயந்தி (25). இவர் தனியார் மருத்துவமனைஒன்றில் நர்சாகப் பணியாற்றி வருகிறார். ஜெயந்தியை வீட்டில் இருக்கும்படி கூறி விட்டு சாந்தி வெளியில் சென்றுவிட்டார்.
தனியாக வீட்டிற்குள் இருந்த ஜெயந்தி திடீரென மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
வீட்டின் கூரையில் புகை வந்ததைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்துப் பார்த்தனர். அப்போது ஜெயந்திதீயில் கருகிய நிலையில் கிடந்தார்.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications