Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமைச்சர்களின் பதவிகள் பறிப்பு ஏன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஊழலற்ற ஆட்சியைத் தருவேன் என்ற அறிவிப்போடு ஆட்சியில் அமர்ந்த ஜெயலலிதாவின் அமைச்சரவையில்இருந்த 3 பேர் பதவிக்கு வந்ததும் வராததுமாக முறைகேடுகளில் ஈடுபட்டதால் தான் அவர்களை முதல்வர்ஜெயலலிதா தூக்கி எறிந்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

22 நாட்களில் இவர்கள் பதவி இழந்துள்ளனர்.

3 அமைச்சர்களின் பதவிப் பறிப்புக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அவற்றின் விவரம்:

அய்யாறு வாண்டையார்:

பறிக்கப்பட்ட பதவி: இந்து அறநிலையத்துறை அமைச்சர்

காரணம் 1: களக்காடு பகுதியில் வனப் பகுதியில் இருந்து இவரது உறவினர்கள் தேக்கு மரங்களைதிருட்டுத்தனமாக வெட்டிக் கடத்தி வந்தனர். இவர்களுக்கு அமைச்சரின் உதவியும் இருந்துள்ளது.

காரணம் 2: முன்னாள் காங்கிரஸ்காரரான அமைச்சரான பின்னரும் கூட தொடர்ந்து காங்கிரஸ்காரக்களையேதன்னுடன் அழைத்துக் கொண்டு திரிந்தது. அதிமுகவினரைப் புறக்கணித்தது.

நத்தம் விஸ்வநாதன்:

பறிக்கப்பட்ட பதவி: உணவுத்துறை அமைச்சர்

காரணம் 1: உணவுத்துறை அமைச்சராகப் பதவியேற்று 3 வாரங்கள் ஆன நிலையிலும் இவர் அதிகாரிகளையேசந்திக்கவில்லை. அமைச்சர் ஆன பந்தாவைக் கொண்டாடுவதிலேயே பொழுதைக் கழித்து வந்தார்.

காரணம் 2: திமுக ஆட்சி காலத்தில் வாங்கப்பட்டு கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ளது புழுத்துப் போன அரிசி எனஜெயலலிதா சட்டசபையில் கூறினார். இது தொடர்பாக ஜெயலலிதாவுக்கு தவறான தகவலை அமைச்சர் தந்ததாகத்தெரிகிறது.

காரணம் 3: அரிசியின் தரம் தொடர்பாக சட்டசபையில் நடந்த விவாதத்தில் அமைச்சர் சரியாக பதில்அளிக்கவில்லை. திமுக எம்.எல்.ஏக்கள் பேசிய பேச்சுக்கு சரியான பதிலை அமைச்சர் தரவில்லை

காரணம் 4: திமுகவினர் மீதான அரிசிக் கடத்தல் குற்றச்சாட்டுகள் தொடர்பான முழு விவரங்களைசேகரிக்கவில்லை.

காரணம் 5: முன்னாள் திமுக உணவுத்துறை அமைச்சர் நேருவின் ஆட்களுக்கே பருப்பு சப்ளை செய்ய உரிமைவழங்கியது.

மிக முக்கிய காரணம்: அரிசிக் கடத்தலில் தொடர்புடைய முக்கிய திமுக தலைகள் ஜெயராமனைத் தொடர்புகொண்டு அவரை உரிய முறையில் கவனிப்பதாக கூறியுள்ளனர். அதை ஏற்றுக் கொண்டு அவர்கள் மீது வழக்குகள்ஏதும் வந்துவிடாமல் தடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்ததார்.

பொள்ளச்சி ஜெயராமன்:

பறிக்கப்பட்ட பதவி: தொழில்துறை அமைச்சர்

காரணம் 1: திமுக ஆட்சியில் நடந்த கொப்பைரத் தேங்காய் ஊழலில் தொடர்புடைய நபர் அமைச்சரைக்கவனித்து அவரது ஆசிர்வாதத்தை பெற்றது ஜெயலலிதாவுக்குத் தெரியவந்தது. இதனால் இந்த ஊழல்தொடர்பாக அதிகாரிகளால் விசாரணை நடத்தக் கூட முடியவில்லை.

காரணம் 2: அக்னி ராஜரத்தினம் போன்ற எதையும் செய்யும் தொழிலதிபர்கள் அமைச்சருக்கு திடீர்நெருக்கமானது.

காரணம் 3: தொழிலபதிபர்கள் சங்கம் கொடுத்த டாடா குவாலிஸ் காரை வாங்கியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+