அமைச்சர்களின் பதவிகள் பறிப்பு ஏன்?
சென்னை:
ஊழலற்ற ஆட்சியைத் தருவேன் என்ற அறிவிப்போடு ஆட்சியில் அமர்ந்த ஜெயலலிதாவின் அமைச்சரவையில்இருந்த 3 பேர் பதவிக்கு வந்ததும் வராததுமாக முறைகேடுகளில் ஈடுபட்டதால் தான் அவர்களை முதல்வர்ஜெயலலிதா தூக்கி எறிந்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது.
22 நாட்களில் இவர்கள் பதவி இழந்துள்ளனர்.
3 அமைச்சர்களின் பதவிப் பறிப்புக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அவற்றின் விவரம்:
அய்யாறு வாண்டையார்:
பறிக்கப்பட்ட பதவி: இந்து அறநிலையத்துறை அமைச்சர்
காரணம் 1: களக்காடு பகுதியில் வனப் பகுதியில் இருந்து இவரது உறவினர்கள் தேக்கு மரங்களைதிருட்டுத்தனமாக வெட்டிக் கடத்தி வந்தனர். இவர்களுக்கு அமைச்சரின் உதவியும் இருந்துள்ளது.
காரணம் 2: முன்னாள் காங்கிரஸ்காரரான அமைச்சரான பின்னரும் கூட தொடர்ந்து காங்கிரஸ்காரக்களையேதன்னுடன் அழைத்துக் கொண்டு திரிந்தது. அதிமுகவினரைப் புறக்கணித்தது.
நத்தம் விஸ்வநாதன்:
பறிக்கப்பட்ட பதவி: உணவுத்துறை அமைச்சர்
காரணம் 1: உணவுத்துறை அமைச்சராகப் பதவியேற்று 3 வாரங்கள் ஆன நிலையிலும் இவர் அதிகாரிகளையேசந்திக்கவில்லை. அமைச்சர் ஆன பந்தாவைக் கொண்டாடுவதிலேயே பொழுதைக் கழித்து வந்தார்.
காரணம் 2: திமுக ஆட்சி காலத்தில் வாங்கப்பட்டு கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ளது புழுத்துப் போன அரிசி எனஜெயலலிதா சட்டசபையில் கூறினார். இது தொடர்பாக ஜெயலலிதாவுக்கு தவறான தகவலை அமைச்சர் தந்ததாகத்தெரிகிறது.
காரணம் 3: அரிசியின் தரம் தொடர்பாக சட்டசபையில் நடந்த விவாதத்தில் அமைச்சர் சரியாக பதில்அளிக்கவில்லை. திமுக எம்.எல்.ஏக்கள் பேசிய பேச்சுக்கு சரியான பதிலை அமைச்சர் தரவில்லை
காரணம் 4: திமுகவினர் மீதான அரிசிக் கடத்தல் குற்றச்சாட்டுகள் தொடர்பான முழு விவரங்களைசேகரிக்கவில்லை.
காரணம் 5: முன்னாள் திமுக உணவுத்துறை அமைச்சர் நேருவின் ஆட்களுக்கே பருப்பு சப்ளை செய்ய உரிமைவழங்கியது.
மிக முக்கிய காரணம்: அரிசிக் கடத்தலில் தொடர்புடைய முக்கிய திமுக தலைகள் ஜெயராமனைத் தொடர்புகொண்டு அவரை உரிய முறையில் கவனிப்பதாக கூறியுள்ளனர். அதை ஏற்றுக் கொண்டு அவர்கள் மீது வழக்குகள்ஏதும் வந்துவிடாமல் தடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்ததார்.
பொள்ளச்சி ஜெயராமன்:
பறிக்கப்பட்ட பதவி: தொழில்துறை அமைச்சர்
காரணம் 1: திமுக ஆட்சியில் நடந்த கொப்பைரத் தேங்காய் ஊழலில் தொடர்புடைய நபர் அமைச்சரைக்கவனித்து அவரது ஆசிர்வாதத்தை பெற்றது ஜெயலலிதாவுக்குத் தெரியவந்தது. இதனால் இந்த ஊழல்தொடர்பாக அதிகாரிகளால் விசாரணை நடத்தக் கூட முடியவில்லை.
காரணம் 2: அக்னி ராஜரத்தினம் போன்ற எதையும் செய்யும் தொழிலதிபர்கள் அமைச்சருக்கு திடீர்நெருக்கமானது.
காரணம் 3: தொழிலபதிபர்கள் சங்கம் கொடுத்த டாடா குவாலிஸ் காரை வாங்கியது.
-
தமிழக தேர்தல் வரலாறு: கருணாநிதிக்கு உதயசூரியன்.. நெடுஞ்செழியனுக்கு சேவல்.. திமுகவின் முதல் சம்பவம்! -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்!












Click it and Unblock the Notifications