கோர்ட்டில் ரகளை செய்த 3 வழக்கறிஞர்களுக்கு சிறை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னை கோர்ட்டில் ரகளையில் ஈடுபட்டதாகக் கூறப்பட்ட 3 வழக்கறிஞர்கள்செவ்வாய்க்கிழமை சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவராக இருப்பவர் கருப்பனன். கடந்த சிலவாரங்களுக்கு முன், இவரும் வேறு சில வழக்கறிஞர்களும் சேர்ந்து நீதிமன்றத்தில் பயங்கர ரகளையில் ஈடுபட்டனர்.
நீதிமன்ற வளாகத்தில் உள்ள பல பொருட்களையும் கண்ணாடி ஜன்னல்களையும் அடித்து நொறுக்கினர்.
இது தொடர்பாக, கருப்பனன், செல்வானந்தம் மற்றும் மோகன்தாஸ் ஆகிய 3 வழக்கறிஞர்கள் மீதும் நீதிமன்றவளாகப் போலீஸார் வழக்கு தொடுத்தனர்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, 3 வழக்கறிஞர்களையும் 15 நாட்களுக்கு ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார்.இதைத் தொடர்ந்து அந்த 3 வழக்கறிஞர்களும் சென்னை மத்திய சிறையில் செவ்வாய்க்கிழமை காலைஅடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications