கோடீஸ்வரன் அரங்கு கலைக்கப்பட்டது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

எம்.ஜி.ஆர். பிலிம் சிட்டியில் கோடீஸ்வரன் நிகழ்ச்சிக்காக போட்டப்பட்டிருந்த அரங்கு திங்கள்கிழமைகலைக்கப்பட்டது.

தனியார் தொலைக்காட்சியான சன் டிவியில், நடிகை ராதிகாவின் ராடன் டிவி நிறுவனம் கோடீஸ்வரன் நிகழ்ச்சியைநடத்துகிறது. இந்த நிகழ்ச்சி கடந்த 6 மாதமாக நடந்து வருகிறது. சென்னை எம்.ஜி.ஆர். பிலிம் சிட்டியில் இந்தநிகழ்ச்சிக்கான அரங்கு அமைக்கப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சியை ராதிகாவின் கணவர் நடிகர் சரத்குமார் நடத்திவந்தார். ராதிகா தி.மு.க.வைச் சேர்ந்தவர் என்பதால்அவர் எம்.ஜி.ஆர். பிலிம் சிட்டியில் நிகழ்ச்சியை நடத்த முந்தைய தி.மு.க. அரசு அனுமதி அளித்தது.

தற்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் எம்.ஜி.ஆர். பிலிம் சிட்டியில் அமைக்கப்பட்டிருந்தகோடீஸ்வரன் நிகழ்ச்சியின் அரங்கு கலைக்கப்பட்டுவிட்டது.

எம்.ஜி.ஆர் பிலிம் சிட்டியில் 20 நாட்களுக்குமேல் தொடர்ந்து நிகழ்ச்சி நடத்தப்படக்கூடாது என்ற விதி உள்ளது.அந்த விதியை மீறி தொடர்ந்து இங்கு 6 மாதகாலமாக கோடீஸ்வரன் நிகழ்ச்சி நடந்து வருவதால் அந்த அரங்கைகலைக்குமாறு ராடன் நிறுவனத்திற்கு அரசு நோட்டீஸ் அனுப்பியது.

இதைத் தொடர்ந்து கோடீஸ்வரன் நிகழ்ச்சி இந்த அரங்கில் நடத்தப்படுவது நிறுத்திக் கொள்ளப்பட்டது. அரங்குதிங்கள்கிழமை கலைக்கப்பட்டது.

திரைப்பட கலை இயக்குநர் தோட்டா தரணிதான் இந்த அரங்கை வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+