For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரூபாய் நோட்டில் காதல் விடுதூது: வாலிபர் கைது

By Staff
Google Oneindia Tamil News

கரூர்:

நூறு ரூபாய் நோட்டில் "ஐ லவ்யூ எழுதி காதல் தூது விட்ட வாலிபரைப் போலீசார் கைது செய்தனர்.

கரூர் அருகே உள்ள வர்ணதீத்தம் என்ற ஊரைச் சேர்ந்தவர் வீரய்யா. இவர் வனத்துறை அலுவலகத்தில் பணியாற்றிவருகிறார். இவரது மகள் சங்கீதா (17), அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார். அதே பகுதியைச்சேர்ந்த மோகன் (19) என்பவர் சங்கீதாவைக் கேலியும் கிண்டலும் செய்து வந்துள்ளார்.

இதையறிந்த வீரய்யா, மோகனைக் கூப்பிட்டு எச்சரித்து அனுப்பியுள்ளார். ஆனால் அதனைஅலட்சியப்படுத்தினார் மோகன். மேலும் சங்கீதாவை அதிமாகத் தொல்லைப் படுத்த ஆரம்பித்தார். வீரய்யாமோகனை அழைத்து மிரட்டியும் பார்த்தார். ஆனால் மோகனின் கிண்டல் குறையவில்லை.

இந்நிலையில், சங்கீதா தனது தோழி தமிழ்ச்செல்வியுடன் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்தவழியாக வந்த மோகன், அவரைப் பின் தொடர்ந்துள்ளார். மேலும், சங்கீதாவை நோக்கி நூறு ரூபாய் நோட்டைவீசியுள்ளார்.

ரூபாய் நோட்டை வீசியதால் அதனைக் கவனித்த சங்கீதாவின் பார்வையில், நோட்டில் அவரது பெயர்எழுதப்பட்டிருந்ததையும் கவனித்தார். அதில், சங்கீதா, ஐலவ்யூ என இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனே அந்த நோட்டை எடுத்துச் சென்று தந்தையிடம் புகார் கூறினார். அவரது தந்தை வீரய்யா போலீசில் புகார்செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து மோகனைக் கைது செய்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X