ரஷ்யாவில் இந்தியத் திருமணம்: கூட்டம் அலைமோதல்
மாஸ்கோ:
ரஷ்யாவில் நடந்த ஒரு இந்தியத் திருமண நிகழ்ச்சியைக் காண்பதற்கு ஏராளமான ரஷ்யர்கள் வந்து குவிந்தனர்.
ரஷ்யாவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் வேலை செய்பவர்கள் சங்க உறுப்பினர்கள் நடத்திய இந்தத்திருமணத்தைக் காண ரஷ்ய நாட்டினர்கள் மட்டுமல்லாது, வேறு சில வெளிநாட்டினரும் வந்திருந்தனர். இவர்களில்பெரும்பாலானவர்கள் வெவ்வேறு தூதரகங்களைச் சேர்ந்த பெண்கள்.
இந்தியக் கலாச்சாரத்திற்கே உரிய வகையில் இந்தத் திருமணம் சிறப்பாக நடைபெற்றது. மணப்பெண்ணுக்குவளையல் அணிவிக்கும் நிகழ்ச்சியான "களிரா"விலிருந்து, மணமக்கள் இருவரும் திருமணம் முடிந்ததும் அக்னியைமும்முறை வலம் வரும் நிகழ்ச்சி வரை அனைத்து திருமண நிகழ்ச்சிகளையும் அனைவரும் வெகுவாக ரசித்துப்பார்த்து மகிழ்ந்தனர்.
அதிலும் முக்கியமாக, மணமகளை மணமகனிடம் மணமகளின் தந்தை ஒப்படைக்கும் "கன்னியாதானம்" எனப்படும்நிகழ்ச்சியைப் பார்த்து ஹாலில் உள்ள அனைவருமே உணர்ச்சி வசப்பட்டு விட்டனர். திருமணத்தின் ஒவ்வொருநிகழ்ச்சியின் முக்கியத்துவத்தையும் அதற்கான பொருளையும் அவ்வப்போது மைக்கில் சொல்லிக் கொண்டேஇருந்தார்கள். அதனால், அங்கே இங்கே என்று எங்கும் திரும்பாமல் அனைவரும் மணமேடையிலேயே கவனமாகஇருந்தனர்.
ஷெனாய் கருவியின் மெல்லிய பின்னணி இசையில், இந்த வடக்கிந்தியத் திருமணத்தைக் கண்டு மெய் மறந்திருந்தரஷ்யர்களுக்கு, பெண்கள் நடத்திய சில இந்திய நடன நிகழ்ச்சிகளும் உள்ளத்தைக் கொள்ளை கொள்வதாகஅமைந்துவிட்டது போலும்!
வெறும் சடங்கு, சம்பிரதாயம், சாஸ்திரத்தோடு நில்லாமல் இந்தியத் திருமணம் ஒரு பெரும் சமுதாய நிகழ்ச்சியாகவேஇருக்கிறது என்பதைச் சொல்லிச் சொல்லி மாய்ந்து போனார் ஒரு பல்கலைக்கழக மாணவர். மாஸ்கோ சிட்டியூனிவர்சிட்டியில் இந்திய வரலாறு பற்றி ஆய்வு செய்து வரும் அந்த மாணவர், தன் வாழ்க்கையிலேயே இந்தத்திருமண நிகழ்ச்சி மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சியாக அமைந்துவிட்டது என்று புல்லரித்துப் போய் கூறினார்.
ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளினில் இருந்து கூப்பிடு தூரத்தில் உள்ள ரஷ்யன் ஸ்டேட் லைப்ரரிஹாலில்தான் இந்த வடக்கிந்தியத் திருமணம் நடந்தது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications