இத்தாலியுடன் இந்தியா சாப்ட்வேர் ஒப்பந்தம்
டெல்லி:
தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் முயற்சியாக புதிய ஒப்பந்தம் ஒன்றில் இந்தியாவும் இத்தாலியும்புதன்கிழமை கையெழுத்திட்டன.
அமெரிக்காவில் ஏற்பட்ட கடும் பொருளாதார வீழ்ச்சியை அடுத்து, ஆயிரக்கணக்கான இந்தியர்கள் அங்கிருந்துவெளியேற்றப்பட்டனர். இதைத் தொடர்ந்து, இந்தியாவின் கவனம் ஐரோப்பிய நாடுகளின் மீது திரும்பியது என்றுசொல்வதைவிட, அவற்றின் கவனமே இந்தியாவின் மீது திரும்பியது என்று சொல்லலாம்.
இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளிலும் இந்தியா தகவல் தொழில்நுட்பத் துறையில் பலஒப்பந்தங்களை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், இந்தியாவின் 4வது ஐரோப்பிய வர்த்தகக் கூட்டாளியாகஇத்தாலி விளங்குகிறது.
அனைத்துத் துறைகளிலும் இந்திய-இத்தாலிக்கிடையே 1 ஆண்டுக்கு ரூ.10,000 கோடி அளவுக்கு வர்த்தகம்நடைபெறுகிறது. ஆனால், 2008க்குள் தகவல் தொழில்நுட்பத் துறையில் மட்டும் ரூ.7 லட்சம் கோடிக்கு வர்த்தகம்நடைபெறவுள்ளது என்று நம்பிக்கை வெளியிட்டார் இந்திய வணிக அமைச்சர் உமர் அப்துல்லா.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications