காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் உள்பட 4 பேர் சுட்டுக் கொலை
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் நடந்த வெவ்வேறு தாக்குதல்களில் 3 தீவிரவாதிகளும் ஒரு ராணுவ வீரரும் கொல்லப்பட்டனர்.
குல்காம் பகுதியில், மத்திய ரிசர்வ் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கம் ஹிஜ்புல் தீவிரவாதிகளுக்கும் நடந்ததுப்பாக்கிச் சண்டையில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டார். அந்தத் தீவிரவாதியிடமிருந்து ஏராளமானவெடிகுண்டுகளும் பத்திரிகைகளும் கைப்பற்றப்பட்டன.
அனந்தநாக் மாவட்டத்தில் நடந்த வேறு ஒரு கடும் துப்பாக்கிச் சண்டையில், ஒரு ஹிஜ்புல் தீவிரவாதி உள்பட 2தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இச்சண்டையில், ஒரு ராணுவ ஜவானும் கொல்லப்பட்டார்.இச்சண்டையின்போது, ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. சண்டை நடந்த இடத்திலிருந்து 2 ஏகே ரகதுப்பாக்கிகள் கிடந்தன.
தவிர, கூப்வாரா மாவட்டத்தில் நடந்த அதிரடித் தாக்குதலின்போது, 7 தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால்கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்களும் வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications