மேட்டூர் அணை திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி
சேலம்:
காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து செவ்வாய்க்கிழமை மாலை தண்ணீர்திறந்துவிடப்பட்டது. தண்ணீர் திறப்பதற்கு முன்னதாக காவிரி அணையில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
முதலில் விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் திறந்துவிடப்பட்ட தண்ணீர், புதன்கிழமை காலை 6 மணி முதல் 10ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்படும். அதிகபட்சமாக 20 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் திறந்துவிடப்படும்.
மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் கல்லணையைச் சென்று சேருவதற்கு 5 நாட்கள் ஆகும்.
மேட்டூர் அணையிலிருந்து உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டதால் காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் பெரும்மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் உற்சாகமாக தங்களுடைய விவசாயத்தைச் செய்யத் தொடங்கினார்கள்.
மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து விடப்படும் நிகழ்ச்சி, பொதுவாக, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும்உயரதிகாரிகள் கலந்து கொள்ளும் பெரும் திருவிழா போல நடத்தப்படும். ஆனால் இந்த முறைபொதுப்பணித்துறை ஊழியர்களால் மிக எளிமையான முறையில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
தண்ணீர் திறந்து விடப்பட்ட போது மேட்டூர் அணையில் நீர்மட்டம் 98.09 அடியாக இருந்தது.