காங்.அறக்கட்டளை: வாழப்பாடி வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

காங்கிரஸ் அறக்கட்டளையை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் மூப்பனாரிடமிருந்து மீட்டு புதியநிர்வாகிகள் நியமிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர்வாழப்பாடி ராமமூர்த்தி வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இதுதொடர்பாக தாக்கல் செய்துள்ள மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

கடந்த 1954ம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை துவக்கப்பட்டது. 7 டிரஸ்டிகள் அடங்கிய இந்தஅறக்கட்டளைதான் அனைத்து நிர்வாகத்தையும் கவனித்துக் கொள்கிறது.

1996ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி பிளவுபட்டது. இதையடுத்து மூப்பனார் காங்கிரஸ் கட்சியின் அனைத்துச்சொத்துக்களையும் கைப்பற்றினார். அதன் பிறகு அறக்கட்டளை நிர்வாகிகள் 3 பேரைப் புதிதாக நியமித்தார்.மூப்பனார், சி. சுப்ரமணியம், ராமசாமி உடையார் ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள். இவர்களில்உடையாரும், சி.சுப்ரமணியமும் இறந்து விட்டனர். அதன் பிறகு புதிதாக டிரஸ்டிகள் நியமிக்கப்படவில்லை.

இந்த அறக்கட்டளையின் கட்டுப்பாட்டில்தான் காமராஜர் அரங்கம், சத்தியமூர்த்தி பவன் ஆகியவை உள்ளன.மொத்தம் ரூ.10 கோடி அளவிலான சொத்து அறக்கட்டளையின் நிர்வாகத்தில் உள்ளது.

துவக்கம் முதல் இந்த அறக்கட்டளையின் நிர்வாகத்தில் காங்கிரஸ் கட்சி முழுமையான அளவில் பங்கு பெறவில்லை.கட்சித் தலைவர்கள் மாற்றம், கட்சிப் பிளவுகள் ஆகியவை காரணமாக டிரஸ்டிகள் அமைப்பதில் பிரச்சினை இருந்துவருகிறது. இதை மாற்ற புதிதாக டிரஸ்டிகளை நியமிக்க உத்தரவிட வேண்டும் என்று வாழப்பாடி தனது மனுவில்கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+