நிருபர்களை சந்திக்க கருணாநிதி மறுப்பு
சென்னை:
முன்னாள் முதல்வர் கருணாநிதி மூட்-அவுட் காரணமாக நிருபர்களை சந்திக்கவில்லை.
புதன்கிழமை தி.மு.க. தலைவர் கருணாநிதி நிருபர்களை சந்திப்பார் என்ற எதிர்பார்ப்பில் நிருபர்கள் தி.மு.க.தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் குழுமி இருந்தனர்.
தி.மு.க. அரசு மீது ரூ.65 கோடிக்கு தரமற்ற அரிசி வாங்கியதாக அ.தி.மு.க. அரசு வழக்கு தொடர்ந்துள்ளது குறித்துகருணாநிதியிடம் கேள்வி கேட்டு பதில் பெற நிருபர்கள் காத்திருந்தனர்.
புதன்கிழமை பிற்பகல் 12.55 மணிக்கு கருணாநிதி அறிவாலயம் வந்தார். சிறிது நேரம் கழித்து வந்த கட்சிநிர்வாகிகள் சிலர், நிருபர்களை தலைவர் சந்திக்க மாட்டார் என கூறினர்.
ஆனாலும் போட்டோ கிராபர்கள் சிலர் கருணாநிதி வெளியே வரும் போது புகைப்படம் எடுக்க வேண்டும் எனகருணாநிதி வெளிவரும் வழியில் குவிந்தனர்.
தயவு செய்து தள்ளிப்போங்கள். தலைவர் உங்களை சந்திக்கமாட்டார் என கட்சி நிர்வாகிகள் கூறிய பின்னும்நிருபர்கள் செல்லாத காரணத்தால், இது தலைவர் கட்டளை என கட்சி நிர்வாகிகள் கூறிய பின் நிருபர்கள் கலைந்துசென்றனர்.












Click it and Unblock the Notifications