சென்னையில் ரயிலை நிறுத்தி பயணிகள் ஆர்ப்பாட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை அருகே அம்பத்தூரில் மின்சார ரயில் உரிய நேரத்திற்கு வராததால் பயணிகள் போராட்டத்தில்ஈடுபட்டனர்.
அம்பத்தூர் ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை காலையில் வரும் ஆவடி-மயிலாப்பூர் மின்சார ரயில் வரவில்லை.இதனால் பயணிகள் ரயில் கிடைக்காமல் அவதிப்பட்டனர்.
இந்நிலையில், திருத்தணியில் இருந்து வரும் மின்சார ரயில் அம்பத்தூர் வந்தது. அந்த ரயிலைப் புறப்பட விடாமல்பயணிகள் தடுத்து நிறுத்தினர். 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் ரயில் நிலையத்தில்பதட்டமான சூழ்நிலை நிலவியது.
அதிகாரிகள் மற்றும் போலீஸார் விரைந்து வந்து பயணிகளை சமாதானப்படுத்தினர். இந்தப் போராட்டம்காரணமாக சுமார் 1 மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications