For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரு ஆட்டோவில் 20 குழந்தைகள்: டிரைவர்கள் கைது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ஆட்டோக்களில் விதிகளுக்குப் புறம்பாக 20க்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற 300ஆட்டோக்களை சென்னை நகர போலீஸார் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தமிழகத்தில் பள்ளிகள் திறந்து விட்டன. அப்பா, அம்மாக்கள், பாட்டிகள், பள்ளி ஆயாக்களுடன் பள்ளிச் சிறார்கள்பள்ளி சென்று வருகிறார்கள். இதுதவிர ஸ்கூல் பஸ், ஸ்கூல் வேன் உள்பட பல வாகனங்களிலும் அவர்கள் சென்றுவருகிறார்கள். இதை விட முக்கியமான வாகனமான ஆட்டோக்களில் காலை நேரங்களில் பள்ளிக் குழந்தைகள்நிரம்பி வழிகிறார்கள்.

ஒவ்வொரு ஆட்டோவிலும் குறைந்தது 15 குழந்தைகள் வரை அடைத்துச் செல்லப்படுகின்றனர். படுவேகமாகடிரைவர்கள் செல்வதாலும், அதிக குழந்தைகளை அடைத்துச் செல்வதாலும் குழந்தைகளின் உடல் நலனுக்கும்உயிருக்கும் ஆபத்து வர வாய்ப்புள்ளது.

ஆட்டோக்களில் அதிக அளவில் குழந்தைகளை அடைத்துச் செல்வது குறித்து, சென்னை நகர போக்குவரத்துபோலீஸாருக்குப் பல புகார்கள் வந்தன. இதையடுத்து இணை கமிஷனர் ஜாபர் சேட், சந்தீப் ராய் ரத்தோர்ஆகியோர் தலைமையில் திவீர சோதனை நடத்தப்பட்டது.

இதில், 20க்கும் மேற்பட்ட குழந்தைகளை அடைத்து ஏற்றிச் சென்றதாக 296 ஆட்டோக்களை பிடித்து போலீஸார்பறிமுதல் செய்தனர். அந்த ஆட்டோக்களின் டிரைவர்களும் கைது செய்யப்பட்டனர்.

இதுதவிர பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற 80 மீன் பாடி வண்டிகளையும் (சென்னையிலேயே மிக மோசமானஉயிர்க் கொல்லி வாகனம் இதுதான்), மோட்டார் பொருத்தப்பட்ட ரிக்ஷாக்களையும் போலீஸார் பறிமுதல்செய்தனர்.

இந்த சோதனை தொடர்ந்து நடத்தப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X