குளத்தில் மூழ்கி 2 மாணவர்கள் பலி
ஈரோடு:
அந்தியூர் பள்ளியில் சேர்ந்த முதல் நாளே குளத்தில் விளையாடச் சென்ற இரண்டு சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கிஇறந்தனர்.
அந்தியூர் அருகே உள்ள சக்திபாளையத்தைச் சேர்ந்தவர் குருசாமி. இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவிராஜாமணி. இரண்டாவது மனைவிமுருகவேணி.
இவரது முதல் மனைவிக்கு குழந்தைகள் இல்லை. இரண்டாவது மனைவி முருகவேணிக்கு 3 குழந்தைகள். இந்தகுழந்தைகள் வேலு (7), விஸ்வநாதன் (5), காந்திமதி (3) ஆகியோருடன் குருசாமி குடும்பம் நடத்தி வந்தார்.
கடந்த ஓராண்டிற்கு முன்பு ராஜாமணிக்கும், முருகவேணிக்கும் ஏற்பட்ட சண்டையில் முருகவேணிதிருப்பூரில் உள்ள அவரது தாய் வீட்டிற்குச் சென்று விட்டார். குழந்தைகளையும் உடன் அழைத்துச் சென்றுவிட்டார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இரண்டு குழந்தைகளை குருசாமியிடம் ஒப்படைத்து விட்டு சென்றார்முருகவேணி. வேலு, விஸ்நாதன் ஆகிய இருவரையும் அவர் அந்தியூர் பள்ளி ஒன்றில் சேர்த்தார்.
அங்கு அவர்கள் இருவரும் முதல்நாள் பள்ளிக்குச் சென்றனர். ஆனால் மாலையில் வீடு திரும்பவில்லை. எனவே,இவர்களை தேடிப் பார்த்தார் குருசாமி. இருவரும் கிடைக்கவில்லை.
இரு நாட்களுக்கு பிறகு அந்தியூரில் உள்ள ஒரு குளத்தில் இரு சிறுவர்களும் தங்கள் புத்தகப் பையுடன்மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார் குருசாமி. இந்த சிறுவர்களின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்குஉட்படுத்தப்பட்டது.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications