வாஜ்பாய்க்கு கருணாநிதி கடிதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இலங்கைச் சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி பிரதமர் வாஜ்பாயிக்கு திமுக தலைவர்கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதிய கடிதத்தின் விவரம்:
இலங்கைக் கடல் பகுதிகளில் மீன் பிடித்ததாகக் குற்றம் சாட்டி 51 தமிழக மீனவர்களைக் கைது செய்து இலங்கைக்கடற்படையினர் சிறையில் அடைத்துள்ளனர். ஆனால் அவர்கள் மீது இன்னும் குற்றச்சாட்டு பதிவுசெய்யப்படவில்லை.
விரைவில் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி அந்த மீனவர்கள் சிறைக்குள்ளேயேஉண்ணாவிரதம் இருப்பதாகச் செய்திகள் வந்துள்ளன. இதையடுத்து, இந்திய அதிகாரிகள் அங்கு சென்றுள்ளனர்.
தொடர்ந்து நிலவி வரும் இந்தப் பிரச்சினைக்கு தொலைநோக்குடன் தீர்வு காண வேண்டும். தமிழக மீனவர்களைப்பாதுகாப்பதற்குத் தகுந்த வழியை மத்திய அரசு காண வேண்டியது அவசியம் என்று கடிதத்தில் பிரதமரைக்கேட்டுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications