ஜெ. நியமனம்: ஜனாதிபதியிடம் ஆளுநர் விளக்கம்
டெல்லி:
ஜெயலலிதாவை தமிழக முதல்வராக நியமித்தது பற்றி இந்திய ஜனாதிபதி கே.ஆர். நாராயணனிடம் தமிழகஆளுநர் பாத்திமா பீவி விளக்கம் அளித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா பதவியேற்றதில் இருந்தே, தமிழக ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் என்று திமுகவும்தமிழக பாஜகவும் மத்திய அரசை வற்புறுத்தி வந்தன.
இந்நிலையில் திடீரென்று வியாழக்கிழமை பாத்திமா பீவி டெல்லி கிளம்பிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.பல்வேறு ஊகங்களையும் கிளப்பியது. மவுலானா அபுல்கலாம் ஆசாத் கட்டுரைப் போட்டிக்குத் தலைமை தாங்கப்போவதாகவும் வேறொரு செய்தி கூறியது.
டெல்லிக்குச் சென்ற பாத்திமா பீவி, சுமார் 30 நிமிடங்கள் ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது.இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று ஜனாதிபதி மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆனால், ஜெயலலிதாவை முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்த சூழ்நிலை பற்றித்தான் ஜனாதிபதியிடம்பாத்திமா பீவி விளக்கமளித்ததாகக் கூறப்படுகிறது.
சென்னை திரும்புவதற்கு முன், உள்துறை அமைச்சர் அத்வானியையும் பாத்திமா பீவி சந்திப்பார் என்று தெரிகிறது.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் தமிழக ஆளுநரின் பதவிக் காலம் முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications