பவானி ஆற்றில் வெள்ள அபாயம்
Subscribe to Oneindia Tamil
மேட்டுப்பாளையம்:
பவானி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால்,அணைக் கட்டுகளுக்குத் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள பில்லூர் டேம் முழு வீச்சில் நிரம்பி வருகிறது. இந்நிலையில், மேட்டுப்பாளையம்அருகில் உள்ள பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, பவானிஆற்றின் கரைப்பகுதியில் இருப்போர் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறுஅறிவுறுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications