For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னைக்கு இன்று முதல் நெய்வேலி குடிநீர்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை நகருக்கு வெள்ளிக்கிழமைமுதல் நெய்வேலியிலிருந்து லாரிகள் மூலம் கொண்டு வரப்படும் தண்ணீர்விநியோகம் செய்யப்படவுள்ளது.

சென்னை நகரில் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுவதால் நெய்வேலி மற்றும் ஈரோட்டிலிருந்து லாரிகள்,ரயில்கள் மூலம் குடிநீர் கொண்டு வந்து விநியோகம் செய்யப்படும் என்று முதல்வர் ஜெயலலிதாஅறிவித்திருந்தார்.

அதன்படி வெள்ளிக்கிழமை முதல் நெய்வேலி தண்ணீர் விநியோகம் துவங்கியது. தினசரி 500 லாரிகள் மூலம்நெய்வேலியிலிருந்து குடிநீர் கொண்டு வரப்பட்டு விநியோகம் செய்யப்படவுள்ளது.

நெய்வேலி அருகேயுள்ள கங்கைகொண்டான், பெரியகுப்பம் ஆகிய பகுதிகளிலிருந்து இந்தத் தண்ணீர் எடுத்தவரப்படுகிறது. இதற்காக நெய்வேலி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் 28 ராட்சத குடிநீர் விவசாய கிணறுகள்அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதுதவிர, ஈரோட்டிலிருந்து ரயில் மூலம் குடிநீர் எடுத்து வரப்படவுள்ளது. வருகிற 20ம் தேதி ஈரோட்டிலிருந்துகிளம்பும் குடிநீர் ரயில் 21ம் தேதி சென்னை வில்லிவாக்கம் ரயில் நிலையத்தை அடைகிறது.

இந்த ரயிலில் மொத்தம் 50 தண்ணீர் டேங்கர்கள் இருக்கும். ஒவ்வொரு டேங்கரும் 25,000 லிட்டர் தண்ணீர்கொள்ளளவு கொண்டது. மொத்தம் 12.5 லட்சம் லிட்டர் தண்ணீர் ஈரோட்டிலிருந்து கொண்டு வரப்படவுள்ளது.

வில்லிவாக்கத்திலிருந்து குழாய்கள் மூலம் நகருக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும். இதற்காக வில்லிவாக்கம்பகுதியில் உள்ள குடிநீர்க் குழாய்களை பழுதுபார்க்கும் பணியை குடிநீர் வடிகால் வாரியம் மேற்கொண்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X