சுதாகரனுக்கு கோடிக்கணக்கில் பணம் ஏது? கருணாநிதி
சென்னை:
கைது செய்யப்பட்டுள்ள சுதாகரனிடம் உள்ள கோடிக்கணக்கான பணம் யாருடையது? என கருணாநிதி கேள்விஎழுப்பியுள்ளார்.
சென்னையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு கருணாநிதி அளித்த பேட்டி:
சுதாகரன் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. அவரிடம் கோடிக்கணக்கில் பணம்இருப்பதாக பத்திரிக்கைகளில் செய்தி வந்துள்ளது. அந்த பணம் யாருடையது என்பதும் எனக்கு தெரியாது.
அரிசி சேமித்து வைத்ததில் ரூ 65 கோடியளவுக்கு அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என ஜெயலலிதா கூறியுள்ளார்.
அதிக அளவில் அரிசி சேமித்து வைத்திருக்கும் காரணத்தால் 10 சதவிகிதம் வரை சேதம் அடைய வாய்ப்புள்ளதுஎன சில நாளிதழ்கள் கூறியுள்ளன. இது உங்களுக்கு புரியும்.
நாங்கள் 14 லட்சம் டன் அரிசி கையிருப்பில் இருப்பதாக தெரிவித்ததை முதலில் மறுத்தனர். பின்பு ஆற்காடுவீராசாமி விளக்கமளித்த போது உணவு அமைச்சர் விஸ்வநாதன் புழுத்துப்போன அரிசி என்றார்.
அந்த அம்மாவும் 3 முறை புழுத்துப்போன அரிசி என கூறினார். அதிகாரிகளை வைத்து விசாரித்த போது இதுபொய் என தெரிந்து போனது.
ஒன்றிரண்டு இடங்களில் கருப்பு, சிவப்பு அரிசிகள் இருக்கலாம். ஆனால் 14 லட்சம் டன் அரிசியும்கெட்டுப்போகவில்லை. இப்போது ரூ 65 கோடி நஷ்டம் என சொல்கிறார்கள். இதை நீங்கள் நம்ப மாட்டீர்கள்.
தி.மு.க. ஆட்சியில் விவசாயிகளுக்கான கடன் வட்டியில் 7 சதவிகிதத்தை தள்ளுபடி செய்தோம். அதற்கு மேல் 5சதவிகிதம் சேர்த்து 12 சதவிகித வட்டியை அவர்கள் தள்ளுபடி செய்துள்ளனர்.
13 சதவிகிதம் என இருந்த வட்டியை 12 சதவிகிதம் என குறைத்தது தி.மு.க.தான். இப்போது அந்த 12சதவிகிதத்தையும் தள்ளுபடி செய்திருப்பது வரவேற்கத்தக்கது.
ஆசிரியர் மாற்றங்களுக்கு கவுன்சிலிங் நடத்தப்படவிருப்பதாக வெளிவந்துள்ள அறிவிப்பு பற்றி எதிர்க்கட்சிதலைவர் அன்பழகன் விரிவான அறிக்கை கொடுத்திருக்கிறார். அதில் எல்லாமே அடங்கியுள்ளது.கிராமங்களிலுள்ள பள்ளிகள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications