சுதாகரனின் திருச்சி வீட்டில் ரெய்டு
திருச்சி:
கொலை முயற்சி வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன்சுதாகரனுக்கு சொந்தமான திருச்சி வீட்டிலும் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் தனது பெயரில் நற்பணி மன்றம் ஒன்றைநடத்தி வருகிறார். அந்த நற்பணி மன்றத்தின் அமைப்புச் செயலாளராக இருந்த கோபு ஸ்ரீதரன் என்பவரைக்கொலை செய்ய முயன்றதாகவும், போதைப் பொருட்கள் வைத்திருந்ததாகவும் சுதாகரன் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.
அவரது தந்தை விவேகானந்தனும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சுதாகரனின் நண்பர் மொய்தீன் மீதும்கோபு ஸ்ரீதர் புகார் செய்ததிருந்தார். இதையடுத்து மொய்தீனும் கைது செய்யப்பட்டார்.
திருச்சியில் உள்ள சுதாகரன் வீட்டிலும் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனை அரை மணி நேரம்நடந்தது.












Click it and Unblock the Notifications