சுலோவேகியாவில் காணாமல் போன 17 இந்தியர்கள்
லண்டன்:
சுலோவேகியா நாட்டிலிருந்து செக் குடியரசுக்கு ஆற்றில் குதித்துத் தப்பிச் செல்ல முயன்ற 20 பேரில் 3 பேர்பிடிபட்டனர். மீதி 17 பேரையும் சுலோவேகியா போலீஸார் தேடி வருகின்றனர்.
காணாமல் போன 17 பேரும் இந்தியர்கள் என்று நம்பப்படுகிறது. இவர்கள் ஆற்றில் மூழ்கி இறந்து போனார்களாஅல்லது செக் குடியரசுக்கே தப்பித்துச் சென்று விட்டார்களா என்பது பற்றி இன்னும் தெரியவில்லை.
இவர்கள் அனைவரும் சட்டவிரோதமாக இங்கிலாந்துக்குச் செல்லவிருந்தார்கள் என்று பிடிபட்ட 3 பேரைவிசாரித்தபோது தெரிய வந்தது. இந்த 3 பேரில் ஒருவர் இந்தியர் என்றும் போலீஸார் கூறுகின்றனர்.
சமீபகாலமாக, சட்டவிரோதமாக இங்கிலாந்துக்குச் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இவர்கள் அனைவரும் இங்கிலாந்தில் அடிமைகளாக வேலை பார்ப்பதற்காக விற்கப்படுகின்றனர்.
இவர்களை விற்பதற்கென்று ஒரு பெரிய கூட்டமே இங்கிலாந்தில் இயங்கி வருகிறது. ஒரு மனிதனுக்கு விலை ரூ.5லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. பெரும்பாலும் கடல் வழியாகத்தான் இந்த மனிதக்கடத்தல் நடைபெறுகிறது.
அவர்களால் இங்கிலாந்து வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். சும்மாவா, சட்டவிரோதமாக அல்லவாவருகிறார்கள்? வழியிலேயே எதிர்பாராதவிதமாக பலரும் இறந்து விடுவார்கள். என்னதான் இவ்வளவுஆபத்துக்கள் இருந்த போதிலும், மக்கள் கடல் மார்க்கமாக ஊடுருவிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அப்படியேவிற்கப்பட்டுக் கொண்டும் இருந்தார்கள்.
பெரும்பாலும் இந்தியாவின் பஞ்சாபிலிருந்தும் குஜராத்திலிருந்தும் வரும் மக்கள்தான் இங்கிலாந்தில்அடிமைகளாக விற்கப்படுகின்றனர். இவர்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு 2 டாலர்கள் வீதம் சம்பளம்கொடுக்கப்படுகின்றது என்றும் கூறப்படுகிறது.
கடந்த மார்ச் மாதம், இங்கிலாந்துப் போலீஸார் நடத்திய அதிரடி சோதனையின் போது, மனிதர்களைக் கடத்திவிற்கும் ஒரு கும்பல் பிடிபட்டது. வடக்கு இங்கிலாந்தின் லெய்செஸ்டரில் இயங்கி வந்த இந்தக் கும்பலிடமிருந்துநூற்றுக்கணக்கான போலி பாஸ்போர்ட்டுகளும், இதர போலி ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.
இந்த மனிதக் கடத்தலில் கைது செய்யப்பட்ட இந்தியர்கள் அனைவரும் தற்போது இங்கிலாந்து ஜெயிலில் கம்பிஎண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
இங்கிலாந்துக் கால்வாய் அருகேதான் இதுபோன்ற மனிதக் கடத்தல்கள் நடைபெறுகின்றன என்பதைக்கேள்விப்பட்டதும், ஏராளமான போலீஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இதனால், தற்போது வெளிநாட்டினர்அவ்வழியாக சட்டவிரோதமாக இங்கிலாந்துக்குள் ஊடுருவுவது மிகவும் குறைந்துள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications