For Daily Alerts
Just In
திமுக ஆதரவு பகுதிகளில் குடிநீர் "கட்.... ஸ்டாலின் புகார்
சென்னை:
சென்னை நகரில் திமுகவுக்கு ஆதரவாக வாக்களித்த பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக திமுகஇளைஞர் அணி செயலாளர் மு.க.ஸ்டாலின் புகார் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை நகரில் திமுகவுக்கு ஆதரவாகவாக்களித்த பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்வதில் பாரபட்சம் காட்டப்படுகிறது.
திமுக வெற்றி பெற்ற தொகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ஆயிரம் விளக்குப்பகுதியில் குடிநீர் விநியோகம் முற்றிலும் தடைபட்டுள்ளது.
அதிமுக அரசின் மனிதாபிமானமற்ற இந்த செயல் தொடர்ந்தால் திமுக இளைஞர் அணி சார்பில் மாபெரும்போராட்டம் நடத்தப்படும் என்று கூறியுள்ளார் ஸ்டாலின்.
Comments
Story first published: Friday, June 15, 2001, 5:30 [IST]