சுதாகரனுக்கு ஜாமீன் கிடைக்குமா?
சென்னை:
உதவியாளரைக் கொல்ல முயற்சித்தது தொடர்பாகக் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை சிறையில்அடைக்கப்பட்டுள்ள சுதாகரனின் ஜாமீன் மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
தமிழக முதல்வரின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன், தன்னைத் தாக்கிக் கொல்ல முயற்சித்ததாக அவருடையஉதவியாளர் ஸ்ரீதர் போலீசில் புகார் செய்ததையடுத்து, சுதாகரன் கைது செய்யப்பட்டு, அவர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. ஹெராயின் என்ற போதைப் பொருளை அவர் வீட்டில் வைத்திருந்ததாகவும் அவர் மீது போலீஸார்வழக்குப் பதிவு செய்தனர்.
சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சுதாகரனை 15 நாள் காவலில் வைக்க வேண்டும் என்று நீதிபதிஉத்தரவிட்டார். இதையடுத்து அவர் பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
போலீஸார் கூறியிருப்பது போல எந்த சம்பவமும் நடக்கவில்லை; வேண்டும் என்றே என் மீது பொய் வழக்குப்போட்டுள்ளனர் என்றும் இதனால் தன்னை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்றும் தன்னுடைய ஜாமீன்மனுவில் சுதாகரன் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவின் மீதான விசாரணை சென்னை 2வது கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமைநடக்கவிருக்கிறது.
இந்த வழக்கில் சுதாகரனின் தந்தை விவேகானந்தன், மைத்துனர் பாஸ்கரன், முகமது கரன் மற்றும் மொய்னுதீன்ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.