For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பக்தர்களுக்கு குடிநீர் வசதி: ஜெ. உத்தரவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் பக்தர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கு முதல்வர்ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் பி.சி.ராமசாமி தெரிவித்தார்.

பழனியில் அறநிலையத்துறை அமைச்சர் பி.சி.ராமசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் பக்தர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்றுமுதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, ஒவ்வொரு கோவிலாகச் சென்று பார்வையிட்டு வருகிறேன். சென்னை கபாலீஸ்வரர் கோவில், ஈரோடுமாவட்டம் காங்கேயம் சிவன் கோவில் மற்றும் சென்னிமலை முருகன் கோவிலுக்குச் சென்று பார்வையிட்டேன்.

தற்போது பழனிமுருகன் கோவிலுக்கு வந்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து வருகிறேன்.

கோவிலில் பக்தர்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும் என்று கோவில் நிர்வாகத்தாருக்கு உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது.

கோவிலை தூய்மையாக வைத்துக் கொள்வது பற்றியும் கோவில் நிர்வாகத்தாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுஎன்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X