விண்வெளிக்கு மனிதனை அனுப்ப இந்தியா தீவிரம்
சென்னை:
வரும் 2008ம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு மனிதனை அனுப்பவிருக்கிறது இந்தியா.
இதற்கான ராக்கெட்டுக்கு ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 என பெயரிடப்பட்டுள்ளது.
மார்க்-3 ராக்கெட்டை 2007 அல்லது 2008க்குள் விண்வெளிக்கு செலுத்தி விடுவோம் என்று இந்திய விண்வெளிஆராய்ச்சி நிலைய இணை இயக்குநர் டாக்டர் எஸ்.எஸ். பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:
மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் உடனடித் திட்டம் எதுவும் இல்லாவிட்டாலும், மனிதனையும் கொண்டுசெல்லும் வகையில்தான் மார்க்-3 தயாரிக்கப்பட உள்ளது.
ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் திறனை அதிகரித்து 4,000 கிலோ செயற்கைக் கோள்களை சுமந்து செல்லும் வகையில்அதை மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்.
கடந்த ஏப்ரலில் ஜி.எஸ்.எல்.வி. மூலம் ஏவப்பட்ட ஐ.ஆர்.எஸ்.-1 செயற்கைக் கோளின் எடை 1,540 கிலோமட்டுமே. அடுத்த ஆண்டு 2,000 கிலோ எடைகொண்ட செயற்கைக் கோள் ஏவப்பட உள்ளது.
ஜி.எஸ்.எல்.வி. தவிர, பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலமும் செயற்கைக் கோள்களை ஏவும் திட்டம் தொடர்ந்துசெயல்படுத்தப்படும்.
வரும் ஆகஸ்டு மாதம் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் விண்ணில் பாயவிருக்கிறது. இந்திய செயற்கைக் கோள் தவிர,பெல்ஜியம் மற்றும் ஜெர்மனியின் செயற்கைக் கோள்களையும் அது விண்ணில் செலுத்தவிருக்கிறது என்றும்பாலகிருஷ்ணன் கூறினார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications