ஓமனில் பொதுமன்னிப்பு பெற இந்தியர்கள் போட்டி

Subscribe to Oneindia Tamil

துபாய்:

ஓமனில் அனுமதியில்லாமல் வாழும் இந்தியர்கள் பொதுமன்னிப்புக் கோரும் முயற்சியில் முழுமூச்சாகஇறங்கியுள்ளனர்.

இந்தியா உள்பட பல நாடுகளிலிருந்து அனுமதியில்லாமல் ஓமனில் வசித்து வரும் மக்களுக்கு பொதுமன்னிப்புவழங்கி அவர்களை சொந்த நாடுகளுக்கு அனுப்ப பொதுமன்னிப்பு வழங்கவுள்ளதாக சமீபத்தில் அரசு அறிவித்தது.

பொதுமன்னிப்பு பெற்று அனுமதியில்லாமல் வாழ்ந்தவர்கள் தங்கள் நாடுகளுக்குச் செல்லலாம் என்றும், ஏப்ரல் 21ம் தேதி முதல் ஜூன் 16 ம் தேதி வரை பொதுமன்னிப்பு பெறலாம் என்றும் அரசு அறிவித்திருந்தது.

பொதுமன்னிப்பு பெறும் கடைசிநாளான சனிக்கிழமை பொதுமன்னிப்பு வழங்கும் அலுவலகத்தின் முன்இந்தியர்களின் கூட்டம் அலைமோதியது. ஓமன் அரசு பொதுமன்னிப்பு வழங்கும் நாட்களின் எண்ணிக்கையைஅதிகரிப்பது குறித்து எதுவும் கூறவில்லை என்பது வேறு விஷயம்.

இருப்பினும் இதுவரை 2,000 இந்தியர்கள் ஓமன் அரசிடம் பொதுமன்னிப்பு பெற்று இந்தியா திரும்பியுள்ளனர்.

இதுகுறித்து ஓமனில் உள்ள இந்திய தூதரக கவுன்சிலர் அப்துல் காலிக் கூறுகையில், பொதுமன்னிப்புப் பெறும்இந்தியர்களுக்காக 4,500 பயண தஸ்தாவேஜூகள் கொடுக்கப்பட்டன. இவைகள் தவிர பாஸ்போர்ட்டுகளும்கொடுக்கப்பட்டன.

அவர்கள் குடியேற்றத்துறை அலுவலகத்துக்குச் சென்று பாஸ்போர்ட்டுக்களை காட்டி பரிசோதனை செய்தபின்இந்தியா திரும்பலாம்.

6,000 முதல் 7,000 வரை இந்தியர்கள் பொதுமன்னிப்பு பெற்று தங்கள் நாடுகளுக்குத் திரும்பவோ அல்லதுஓமனிலேயே நிரந்தரமாகத் தங்கவோ செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஓமனில் 3, 00,000 தொழிலாளர்கள் அனுமதியில்லாமல் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் பலநாடுகளைச் சேர்ந்தவர்கள். இவர்களில் இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். பாகிஸ்தானியர்கள் 1, 00,000 பேரும், வங்கதேசத்தினர் 1,20,000 பேரும், பிலிப்பைன்ஸைச் சேர்ந்தவர்கள் 10, 000 பேரும் உள்ளனர்என்றார் காலிக்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+