விஸ்வரூபமெடுக்கிறது சென்னை குடிநீர் பிரச்சினை
சென்னை:
சென்னை நகரில் குடிநீர்ப் பற்றாக்குறை அதிகரித்துள்ள நிலையில், நகரின் பல பகுதிகளில் தொடர்ந்து சாலைமறியல் உள்ளிட்ட பல போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன.
சென்னை நகரில் குடிநீர்ப் பற்றாக்குறை விஸ்வரூபமெடுத்து வருகிறது. பல பகுதிகளில் குடிநீர் பிரச்சினை மிகமோசமாக உள்ளது. இந்தப் பகுதிகள், தண்ணீர் லாரிகளைப் பார்த்து பல நாட்களாகி விட்டன.
தண்ணீர் இல்லாமல் காலி குடங்களுடன் தெருவில் காத்துக் கிடப்பது பெண்களுக்கு வழக்கமாகி, பழக்கமாகிவிட்டது. திடீரென வரும் குடிநீர் லாரிகளில் தண்ணீரைப் பிடிப்பதற்கு நடக்கும் அடிதடி, கார்கில் போர்க்களத்தைநினைவுபடுத்தும்.
சென்னை நகரில் சில பகுதிகளில் மட்டுமே வீடுகளுக்கு குடிநீர்க் குழாய் இணைப்பு உள்ளது. அதிலும் கூட தினசரிதண்ணீர் வருவதில்லை. வாரத்தில் சில நாட்கள் மட்டுமே குடிநீர் விநியோகம் உண்டு. பிற பகுதிகளில் குடிநீர்லாரிகளை மட்டுமே நம்பி மக்கள் இருக்கிறார்கள்.
தற்போது நெய்வேலியிலிருந்து லாரிகள் மூலம் குடிநீர் கொண்டு வர அரசு ஏற்பாடு செய்துள்ளது. மேலும் ரயில்மூலம் குடிநீர் கொண்டு வர ஏற்பாடுகள் நடந்து கொண்டுள்ளன.
இந்த நிலையில் தண்ணீர் கோரி பொதுமக்கள் சாலைகளுக்கு வரத் துவங்கி விட்டனர். காலிக் குடங்களுடன்சாலைமறியல் போராட்டங்கள் நடப்பது சாதாரணமாகி விட்டது. தினசரி நகரில் ஏதாவது ஒரு பகுதியில் பெண்கள்காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டு தண்ணீர் கோரி வருகின்றனர்.
சனிக்கிழமை பம்மல், எம்.ஜி.ஆர். நகர் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல்நடத்தினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து பெண்களைசமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர்.
நிலைமை மோசமாவதற்குள் அரசு உரிய நடவடிக்கை எடுத்து தண்ணீர்ப் பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.