கோவை வங்கியில் ரூ.4 கோடி நகை-பணம் கொள்ளை

Subscribe to Oneindia Tamil

கோவை:

கோவையில் வங்கியை உடைத்து ரூ.4 கோடி மதிப்புள்ள நகை மற்றும் பணம் கொள்ளை போயின.

கோவையை அடுத்த சுந்தராபுரத்தில் இந்தியன் ஓவர் சீஸ் வங்கி உள்ளது. இந்த வங்கியில் கடந்த சில நாட்களுக்குமுன் ஒரு கொள்ளை முயற்சி நடந்தது. அப்போது கொள்ளையர்கள் ஜன்னல் வழியாகப் புகுந்து கம்ப்யூட்டரைதிருடிச் சென்றனர். இதன் பின்னர் அந்த வங்கியின் ஜன்னல் சீரமைக்கப்பட்டது.

தற்போது அதே வங்கியில் கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர். வங்கியை உடைத்துஉள்ளே இருந்த ரூ.4 கோடி மதிப்புள்ள நகை, பணத்தை அவர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். சீரமைக்கப்ட்டஜன்னலையே மீண்டும் உடைத்துதான் இந்தக் கொள்ளையை அவர்கள் நடத்தியுள்ளனர்.

இந்த வங்கியில் ஏற்கனவே கொள்ளை முயற்சி நடந்தபோதிலும் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள்செய்யப்படவில்லை. மேலும் பாதுகாப்பிற்காக காவலர்களும் நியமிக்கப்படவில்லை. எனவே கொள்ளையர்கள்மீண்டும் தங்கள் கைவரிசையைக் காட்ட இது வழிவகுத்து விட்டது.

நகை மற்றும் பணம் வைக்கப்பட்டிருந்த லாக்கர் முற்றிலும் சேதப்படுத்தப் பட்டிருந்தது. கேஸ் வெல்டிங் மூலம்லாக்கர் தகர்க்கப்பட்டு இந்தக் கொள்ளை நடந்துள்ளது.

போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+