For Daily Alerts
Just In
காவிரி நீர் பிரச்சனைக்கு தீர்வு காண காங். கோரிக்கை
திருச்சி:
காவிரி நதி நீர் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கோரியுள்ளது.
அனைத்து மாவட்ட காங்கிரஸ் தலைவர்களின் கூட்டம், தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் தமைமையில்திருச்சியில் நடந்தது.
அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் மாதவ்சிங் சோலங்கி இக்கூட்டத்தில் பார்வையாளராகக் கலந்துகொண்டார்.
விவசாயக் கடன்களுக்கான வட்டியைத் தள்ளுபடி செய்த முதல்வர் ஜெயலலிதா, அதே விவசாயிகளுக்குப்பயனளிக்கும் வகையில், காவிரி நதி நீர்ப் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவர முழுமையான நடவடிக்கைகளைமேற்கொள்ள வேண்டும். காவிரிப் பிரச்சனை உள்பட 12 தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
காமராஜர் பிறந்த நாள் விழாவை நடத்த, அகில இந்தியக் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியைஅழைக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
Comments
Story first published: Monday, June 18, 2001, 5:30 [IST]