கடைசி பெஞ்சுகள் கூட சாதிக்கலாம்...
சென்னை:
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மாநிலத்திலேயே 2வது இடத்தைப் பெற்ற 2 பாண்டிச்சேரி மாணவிகளும், வகுப்பறையில்கடைசி "டெஸ்க்"கில் உட்கார்ந்து இருப்பவர்கள் என்பது குறுப்பிடத்தக்கது.
ஆர். அனிதா, ஆர். சுஜரிதா என்ற இந்த 2 மாணவிகளும் 489 மார்க்குகளைப் பெற்றுள்ளனர். இருவரும்பாண்டிச்சேரி இமாகுலேட் ஹார்ட் ஆப் மேரி மேல்நிலைப் பள்ளியில் படித்தவர்கள்.
இவர்கள் இருவருமே எல்.கே.ஜி. முதல் சேர்ந்தே படித்தார்களாம். தங்கள் வகுப்பறையில் கூட அருகருகில்தான்இருவரும் உட்கார்ந்திருப்பார்களாம். 10ம் வகுப்பில் கூட, கடைசி "டெஸ்க்"கில்தான் இருவரும் உட்கார்ந்துதான்படித்தார்களாம்.
கடைசி "டெஸ்க்"கில் உட்கார்ந்து கொண்டே நாங்கள் இந்தச் சாதனையைச் செய்துள்ளோம் என்று சுஜரிதாபெருமை பொங்கக் கூறினார்.
பெரிய நரம்பியல் மருத்துவராவதுதான் சுஜரிதாவின் இலட்சியமாம். இவருடைய தோழி அனிதாவோ, ஐ.ஏ.எஸ்.அதிகாரியாக ஆவதையே விரும்புகிறார். அதற்காக இப்போதே படிக்க ஆரம்பித்து விட்டதாகவும் இவர்கூறுகிறார்.