கடன் தொல்லை: ரஜினி ரசிகர் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில், வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவது தொடர்பாக சகோதரர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்புகாரணமாக ரஜினி ரசிகர் மன்ற பிரமுகர் தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் என்ற ஜிலோ காந்த் (வயது 36). ஜிலோ காந்த்தின்சொந்த ஊர் செஞ்சி. இவர் தென் சென்னை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற செயலாளராக இருந்து வந்தார். தீவிரரஜினி ரசிகரான ஜிலோ காந்த், நன்றாகப் பேசக் கூடியவர். மன்றத்தின் மூலம் பல்வேறு பணிகளை அப்பகுதிகளில்செய்து வந்தார்.

ஒரு கால் ஊனமான ஜிலோகாந்த், அப்பகுதியிலுள்ள கார்மண்ட் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.ஜிலோகாந்த்திற்கு சாந்தி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். வேலை பார்க்கும் நிறுவனத்தில் குறைந்தஅளவே சம்பளம் கிடைத்ததால் பணத் தேவைக்கு வெளியில் வட்டிக்குப் பணம் வாங்கி வந்துள்ளார் ஜிலோ காந்த்.இந்தக் கடன் தொகை அதிகமாகவே தான் குடியிருக்கும் சொந்த வீட்டை விற்றுப் பணத்தைக் கொடுக்க முடிவுசெய்தார் ஜிலோகாந்த்.

ஆனால் சொந்த வீட்டில் தனது அண்ணன்களுக்கும் பங்கு உள்ளதால் அவர்களிடம் சென்று வீட்டை விற்பதுதொடர்பாக பேசியுள்ளார். அப்போது அண்ணன்கள், ஜிலோகாந்த்தைக் கண்டித்துள்ளனர் என்று தெரிகிறது.இதனால் மன வருத்தம் அடைந்த ஜிலோகாந்த், ஞாயிற்றுக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

தனது மனைவி சாந்திக்கு அவர் எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தில், குழந்தையை நன்கு கவனித்துக் கொள்ளுமாறுகூறியுள்ளார் ஜிலோகாந்த். கடந்த வாரம்தான் மனைவி, குழந்தைகளை செஞ்சிக்கு அனுப்பி வைத்துள்ளார் ஜிலோகாந்த்.

தகவல் அறிந்ததும், ரஜினி ரசிகர் மன்ற தலைமைச் செயலாளர் சத்தியநாராயணா, முன்னாள் எம்.எல்.ஏ. சைதைதுரைசாமி உள்ளிட்ட பலர் விரைந்து வந்த ஜிலோகாந்த்தின் உடலுக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலிசெலுத்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+