சென்னை வந்தது நெய்வேலி தண்ணீர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நெய்வேலியிலிருந்து திங்கள்கிழமை காலை 100 லாரிகளில் நிரப்பப்பட்ட குடிநீர் நண்பகலில் சென்னை வந்துசேர்ந்தது.
காலை 6 மணிக்கு தமிழக அமைச்சர்கள் தளவாய் சுந்தரமும், துரைராஜூம் கொடியசைத்து, இந்த குடிநீர் லாரிகளைஅனுப்பி வைத்தனர்.
திங்கள்கிழமை நண்பகல் அளவில் சென்னை வந்து சேர்ந்த 100 லாரிகளும், கீழ்ப்பாக்கத்தில் உள்ள நீர் சுத்திகரிப்புநிலையத்திற்கு அனுப்பப்படும்.
ஒவ்வொரு லாரியும் 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்டுள்ளது. சுத்திகரிப்பு செய்யப்பட்ட பின்னர்,செவ்வாய்க்கிழமை காலை முதல் குடிநீர் விநியோகம் ஆரம்பமாகும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications