வழக்கம் போல மாணவர்களை முந்திய மாணவிகள்
சென்னை:பத்தாவது வகுப்புத் தேர்வில் வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சிபெற்றுள்ளனர்.
பத்தாவது வகுப்புத் தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியாகின. இதில் வழக்கம் போல மாணவர்களின்தேர்ச்சி விகிதம், மாணவியரை விட குறைவாகவே உள்ளது. மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 68 சதவீதமாகும்.ஆனால் 73 சதவீத மாணவியர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பள்ளிகள் மூலம் மொத்தம் 5,91,817 பேர் தேர்வு எழுதினர். தனியாக தேர்வு எழுதியவர்களையும் சேர்த்துமொத்தம் 7,22,221 பேர் தேர்வு எழுதினர்.
60 சதவீதத்திற்கும் மேற்பட்ட மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியரின் எண்ணிக்கை 2,92,881 பேர். மொத்தம்42.72 சதவீதம் பேர் முதல் வகுப்பில் தேர்வு பெற்றுள்ளனர்.
கணிதத்தில் சென்டம் அடித்தவர்கள் 9,502 பேர். அறிவியலில் 698 பேரும், சமூக அறிவியலில் 85 மாணவர்களும்நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications