For Daily Alerts
Just In
விவசாயி மகனின் "வரலாறு" சாதனை
தருமபுரி:
மெட்ரிகுலேசன் தேர்வில் வரலாறு-புவியியல் பாடத்தில் மாநிலத்திலேயே 2வது இடம் பெற்றார் ஒரு விவசாயியின்மகன்.
அவருடைய பெயர் வி. ரவிசங்கர். வரலாறு-புவியியல் பாடத்தில் 200க்கு 196 மார்க்குகளைப் பெற்றுள்ளார். இவர்மொத்தம் 1043 மார்க்குகள் பெற்றுள்ளார்.
ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளி மாணவரான ரவிசங்கருக்குச் சொந்த ஊர் பெரியதள்ளப்பாடிகிராமம் ஆகும்.
ரவிசங்கரின் தந்தை வாசுதேவன் ஒரு விவசாயி ஆவார். தாயார் பெயர் ராணி.
ஆசிரியர்கள் காட்டிய சிறப்பு கவனமும் பெற்றோர் அளித்த ஊக்கமும்தான் தன்னுடைய இந்த வெற்றிக்கு வழிவகுத்தன என்றார் ரவிசங்கர்.
Comments
Story first published: Tuesday, June 19, 2001, 5:30 [IST]