முதல்வர் ஜெ.வுக்கு மதானி கடிதம்

Subscribe to Oneindia Tamil

கோவை:

தன்னை சிறையில் பார்க்க வரும் தனது உறவினர்கள் அவமானப்படுத்தப்படுவதாக கோவையில் நடந்த தொடர்குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அப்துல் நாசர்மதானி தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் புகார் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தை அவர் சிறைகண்காணிப்பாளர் மூலமாக முதல்வருக்கு அனுப்பி வைத்தார். அந்த கடிதத்தின் நகல் மக்கள் நல உரிமைக்கழகத்தினருக்கும், பத்திரிக்கை அலுவலகத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அவர் அந்த கடிதத்தில் அவரை சந்திக்க வரும் அவரது உறவினர்கள் போலீசாரால் எந்த அளவிற்குஅவமானப்படுத்தப்படுகிறார்கள் என விளக்கியுள்ளார். அவர் மேலும் கடிதத்தில் கூறியுள்ளதாவது:

எனக்கு நெஞ்சு வலி, ரத்தக் கொதிப்பு, சர்க்கரை வியாதி, குடல் புண், கழுத்து வலி உள்ளிட்ட பல வியாதிகள்உள்ளன. மருத்துவர்கள் என்னை இயற்கை வைத்தியமும், பிசியோதெரபி பயிற்சியும் செய்யும்படி கூறினர்.

5வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட் உத்தரவிட்ட பின்பும் சிறையில் இருக்கும் போலீஸ் அதிகாரிகள் எனக்கு பரிந்துரைசெய்யப்பட்ட சிகிச்சைக்கு அனுமதி தரவில்லை. பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி எனக்கு சிகிச்சைக்குஅனுமதி மறுத்து விட்டனர்.

எனது உறவினர்கள் அவமானப்படுத்தப்பட்டது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும் இயற்கைவைத்தியம் செய்வதற்கு அனுமதி பெற்றுத்தர வேண்டும் என கூறியுள்ளார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+