உடுமலை அதிமுக பிரமுகர் வீட்டில் கொள்ளை
Subscribe to Oneindia Tamil
கோவை:
உடுமலைப் பேட்டையில் உள்ள அதிமுக பிரமுகர் வீட்டில் 125 பவுன் நகை கொள்ளை போனது. இந்தக் கொள்ளைகும்பலைப் போலீசார் தேடி வருகின்றனர்.
உடுமலைப் பேட்டையில் அதிமுக பிரமுகர் லியாகத் அலிகானின் வீடு ஒன்று உள்ளது. லியாகத் அலிகான்சென்னையில் குடும்பத்துடன் இருப்பதால், அவரது வீடு கடந்த சில நாட்களாக பூட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில், திங்கள்கிழமை லியாகத் அலிகானின் உறவினர் வீட்டைத் திறந்து பார்த்தார். அப்போது பீரோஉடைக்கப்பட்டு அதிலிருந்த நகைகள் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது. இந்த பீரோவில் இரண்டரை லட்சரூபாய் மதிப்புள்ள 125 பவுன் நகை கொள்ளை போனது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து அவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications