For Daily Alerts
Just In
சுதாகரனின் நெருங்கிய நண்பர் கைது
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்புமகன் சுதாகரனின் மன்ற நிர்வாகி காயல் இளவரசன் புதன்கிழமைஅதிகாலை கைது செய்யப்பட்டார்.
முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்புமகன் சுதாகரன். இவர் நற்பணி மன்றம் ஒன்றை நடத்திவருகிறார்.
அதில் நிர்வாகியாக இருந்த கோபு ஸ்ரீதர் என்பவைர தாக்கியதாகவும், கொலை செய்வதாக மிரட்டியதகாவும் கூறிஅவர் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சுதாகரனின் நெருங்கிய நண்பரும், மன்ற நிர்வாகியுமான காயல் இளவரசன் என்ற முக்கமது சத்ரூஸ்(43) என்பவரை போலீசார் புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு கைது செய்தனர்.
இளவரசனுக்கும், சுதாகரனுக்கும் நெருங்கிய நட்பு இருப்பதால் அவரிடம் சுதாகரன் தொடர்பாக போலீசார் தீவிரவிசாரணை நடத்தி வருகிறார்கள்.
Comments
Story first published: Thursday, June 21, 2001, 5:30 [IST]