சுதாகரனின் ஜெயில் வாசம் தொடர்கிறது, தந்தைக்கு ஜாமீன்
சென்னை:
கொலை மிரட்டல் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின்முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனின் தந்தை விவேகானந்தனுக்கு ஜாமீன் வழங்கி சென்னை முதலாவது செஷன்ஸ்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்புமகன் சுதாகரன் நடத்திவந்த நற்பணி மன்றத்தின் நிர்வாகியாகஇருந்த கோபு ஸ்ரீதர். இவரைத் தாக்கியதாகவும், கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும், சுதாகரன் மீதுகொலை மிரட்டல் வழக்கு தொடரப்பட்டது.
இதே வழக்கு தொடர்பாக சுதாகரனின் தந்தை விவேகானந்தனும் கைது செய்யப்பட்டார். கோபு ஸ்ரீதரின்மனைவியை மிரட்டியதாக விவேகானந்தன் மீது மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என கேட்டு விவேகானந்தன் சென்னை முதன்மை செஷன்ஸ்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சின்னப்பன், விவேகானந்தனை ரூ10,000 சொந்த ஜாமீனிலும், அதே தொகைக்கான இரு நபர் ஜாமீனிலும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
இதே போல் முதலில் தொடரப்பட்ட வழக்கிலும் தனக்கு ஜாமீன் வழங்கப்பட வேண்டும் எனக் கோரி சென்னைஉயர் நீதிமன்றத்தில் விவேகானந்தன் மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.