திருப்பூர் "பந்த்" முழு வெற்றி
திருப்பூர்:
திருப்பூரில் இன்று (வியாழக்கிழமை) "டிராபேக்" சலுகை குறைப்பை எதிர்த்து அனைத்துக் கட்சி சார்பில் பந்த்நடந்தது.
இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. பரபரப்பாக இருக்கும் தொழிற்சாலைகள் வெறிச்சோடிக்கிடந்தன.
திருப்பூரில் "டியூட்டி டிரபேக்" சலுகைக் குறைப்பை எதிர்த்து, பனியன் தொழிற்சாலைகளுக்கு ஆதரவாக அனைத்துக்கட்சிகளும் வியாழக்கிழமை பந்த் நடத்தின. இந்த பந்த் முழு அளவில் வெற்றி பெற்றுள்ளது.
காலை 6 மணிக்குத் துவங்கிய பந்த், மாலை 6 மணி வரை நீடித்தது. கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.
மக்கள் நடமாட்டம் கூட தெருக்களில் இல்லாத நிலையில், மிக அமைதியாகவே பந்த் நடந்தது. மக்களின் முழுஆதரவு இருந்ததால், சிறு கடையைக் கூட திறக்க யாரும் முன்வரவில்லை.
பந்த் நடத்த வேண்டாம் என மாவட்ட கலெக்டர் செல்லமுத்து விடுத்த வேண்டுகோள் முற்றிலும் நிராகரிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications