விமானத்தில் வெடிகுண்டு புரளி: சிறுவன் கைது
மும்பை:
மும்பை வரும் விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகத் தொலைபேசி மூலம் புரளியைக் கிளப்பிய பூனாவைச்சேர்ந்த 13 வயது சிறுவனைப் போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து மும்பை ஜெட் ஏர்வேஸ் வெளியிட்டுள்ள செய்தி:
டெல்லியிலிருந்து பூனா செல்லும் விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக சனிக்கிழமை மும்பை விமானநிலையத்துக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. தொலைபேசியில் பேசியது ஒரு சிறுவன்.
இதையடுத்து டெல்லியிலிருந்து மும்பை வழியாக பூனாவுக்கு செல்லும் 9 டபிள்யூ 363 விமானம் மும்பையில்நிறுத்தப்பட்டு, பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டது. இந்த விமானத்தில்தான் வெடிகுண்டு வைத்திருப்பதாக அந்தச்சிறுவன் தொலைபேசியில் கூறியிருந்தான்.
பின்னர், வெடிகுண்டு நிபுணர்களும், மோப்ப நாய்ப்படையினரும் அவ்விமானத்தைச் சோதனையிட்டனர்.அப்போது, வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்தத் தகவல் வெறும் புரளி என்று தெரிய வந்தது.
இதையடுத்து தொலைபேசி மூலம் புரளியைக் கிளப்பிய நபர் யார் என்று அடையாளம் காணும் பணி முடுக்கிவிடப்பட்டது. விசாரணையில் பூனாவைச் சேர்ந்த சிறுவன்தான் தொலைபேசி மூலம் புரளியைப் பரப்பியது என்றுதெரிய வந்தது. குற்றவாளி சிறுவனாக இருப்பதால், அவனுடைய பெயர் வெளியிடப்படவில்லை.
இந்தப் புரளியால், டெல்லியிலிருந்து சுமார் 2 மணி நேரம் தாமதமாக அந்த விமானம் பூனா வந்து சேர்ந்தது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications